1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது அதற்கு தூரம் தடை இல்லை.2. நம் உடலில் உள்ள செல்லுக்கும் சுய உணர்வு உள்ளது.3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.4. ஒவ்வொரு மனிதனுக்கும் #ட்சும சரீரம் உண்டு.இதுவே ஒளி உடல் எனப்படும்.5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணறபடுகிறது.6. மகான்கள்.சித்தர்களை சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனேசரீரத்தில் பதிவாகி உள்ளது.8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி சமையல் செய்வது %லமாக ருசியாக வெளிப்படுகிறது.9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரிரம் குணப்படுத்துகிறது.10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.11. மனிதன் என்பது அவன் உடல் மட்டுமல்ல.12. கோவில்களில் சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் #ட்சும உடலுக்கும் உள்ள தொடர்பு பாதிப்பே ஆகும்.14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.16. மனதாலும் உடலாலும் இயற்கையை விட்டு விலகும் போது தீராத களைப்பு ஏற்படும்.17. மனிதல் தலைகீழாக வளரும் மரம். %ளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது,19. ஒருமனிதனின் புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சம்ம்.20. மனிதனை தவிர மற்ற இனங்கள் #ட்சும உணர்வு முலமே எதையும் அனுகு கிறது.21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால் மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.22. நமது வீட்டில் பஞ்ச புத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.23. வலி என்பது உடலின் மொழி.அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.24. நிகழ்கால் உணர்வுடன் இருக்க பழகுங்கள்.25. வலியை ஏற்று கொண்டு அதன் முலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும் அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.32. கடல்நீர் நம்முடைய பாவ .தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.33. உப்பு நீர் தெளித்து விடு கலுவினால் #ட்சும தீய பதிவுகள் நீங்கும்.34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல பேச தொடவோ கூடாது.35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அனுகும் போது நமது சுட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.36. செயல்குறைந்த உடல் உறுப்பை அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.37. ஒரு நாளில் சில நிமிடமாவது வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள் .38. பிறந்த குழந்தையும் நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.39. #ரிய ஒளியில் காயவைத்த துணி பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.40. மனது மாயையில் விழுகிறது.#ட்சும சரிuமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது,41. மனித உடல் இறப்பதற்கு அவனது.முன் பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.43. நாம் பயன் படுத்தும் பொருள்களில் நமது எண்ண பதிவு ஏற்படுகிறது,44. நாம் தும்மும் போது அதன் அதிர்வு தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.45. தொடர்ந்த ஒரே எண்ணம் செயல் வடிவம் பெறும்.46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.47. பிராண சக்தி இல்லா உணவு உடலுக்கு சுமையே48. போதை பொருள் நரம்பு மண்டலத்தை அழிக்கும்.49. தீயவர்களை சுழ்ந்து தீய எண்ணமும் நல்லவர்களை சுழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.50. தூக்கம் என்பது விழிப்புணர்வு அற்ற தியானம், .தியானம் என்பது விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.
ஞாயிறு, 7 மார்ச், 2021
ஆன்மீக மற்றும் ஒளி உடம்பு பற்றிய வார்த்தைகள்
என்றும் இளமையாக இருப்பது எப்படி ?
- நாம் உண்ணும் அனைத்து உணவிலும் இயங்கு சக்தி உள்ளது. அதில் உள்ள இயக்கமே நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் சக்தி அளிக்க்கிறது.
- இந்த சக்தி என்பது "பிராண சக்தி" தான்.இதை உணவு பிராணன் என்று கூறலாம்.இது இளமையை தரும் சக்தியாகும்.
- வேறு வேறு உணவில் விதவித மான பிராண சக்திகள் உள்ளது. உங்கள் உடல் செல்களுக்கு எது பொருத்தமான உணவு என்பதை கண்டு பிடிக்கவேண்டும் .
- அதை போல ஒவ்வொரு உணவிலும் பிராண சக்தியுடன் இணைந்து "விஷ கழிவு சக்தி" யும் உள்ளது. இதன் அளவு பொருளுக்கு பொருள் வேறுபடும்.
- மேலும் பிராண சக்தி அதிகம் உள்ள பொருள்களை உண்ணும் போது அந்த சக்தியை நாம் அன்றே பயன்படுத்த வேண்டும். அமர்ந்தே இருப்பதால் அந்த சக்தியை உடல் செல்கள் பயன்படுத்த இயலாது.எனவே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- ருசிக்க்காக விசா சக்தி பொருட்களை சாப்பிடும் போது அதனை விரைவாக கழிவாக வெளியேற்றிவிட வேண்டும். இல்லையெனில் உடலின் பள்ளமான பகுதிகளில் தங்கி வயோதிக தன்மையை ஏற்படுத்த்தும்.
நமது உடலை அன்னமய கோசம் என்று கூறுகிறோம். அன்னம் என்றால் உணவு ஆகும் .தாயின் கருவறையில் ஒரு அணுவாக இருந்த நாம் (செல்லாக ) இன்று ஐம்பது கிலோ எடையாக இருப்பதற்கு காரணம் அன்னம் என்ற உணவுதான். உணவு எடுத்து கொள்வதிலும் மற்றும் கழிவு வெளியேற்றுவதிலும் தான் மிக மிக்க்கியமான" இளமையின் ரகஸ்யம்" உள்ளது. மேலும் நாம் விரும்பிய இடத்தில் உடல் செல்களின் தளர்வை நீக்க தியான பயிற்சி உள்ளது. அதை கற்றுக்கொள்வதால் நமது உடலுக்குள் பல மாயா ஜாலம் செய்யலாம். முக வசீகரம் பெறலாம் .இதற்கு " ஸம்யமம் " என்று பெயர். இது ஒரு நாள் பயிற்சி வகுப்பு (7 மணி நேரம் ) கற்று கொள்ள விருப்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளாலாம்.
ஹீலிங் என்றால் என்ன ?
செவ்வாய், 2 மார்ச், 2021
முடியும் குணம் பெற முடியும்
சர்க்கரை வியாதியிலிருந்து குணம்பெற முடியும்எப்படி ?
- உடல் சின்னங்கள்
- உடல் உணர்வுகள்.
- மன உணர்வுகள் இதை முதலில் பட்டியலிடவும்.இதை பட்டியலிடும் போதே தங்களை பற்றி அறிந்து கொள்ள்லாம்.ஏன் நாம் நோய் வாய் பட்டுள்ளோம் என்று அப்போதே தெரிந்து கொள்ள்லாம்.நோய் நாடி நோய்முதல் நாடி என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள்.இதுதான் நோய். இதுதான் பள்ளம் என்று தெரியாதவைரை நாம் உழன்று கொண்டேதான் இருக்க வேண்டும். மருந்து மாத்திரைகலை வாழ்நாள் முழுவதும் எடுத்து கொண்டுதான் இருக்க வேண்டும்.தனிப்பட்ட உண்ர்வு பூர்வமான முயற்சிதான் குணம்பெற உதவியாயிருக்கும்.பரிசோதனைகூட முடிவை மட்டும் வைத்து நாம் தீர்மானிக்கின்றோமோ அதுவரை தோல்வியைதான் தழுவமுடியும்.
திங்கள், 28 டிசம்பர், 2020
- இன்று சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு அதிகமாக சிறுநீரகம் பாதிக்க பட்டு உள்ள்ளது .நமது உடல் அறிவியலால் புரிந்து கொள்ள முடியாத நுதனமான கருவி யாகும் ..
- இயற்க்கை சிகிச்சை மிக நுட்பமாக குணப்படுத்தும் .முதலில் தேவையான ரத்த பரி சோதனை செய்து கொள்ள வேண்டும்எந்த அளவு சிறுநீரகம் கெட்டு உள்ளது என அறிந்து கொள்ள வேண்டும் .
- சிகிச்சை துவங்கிய பின்னர் வாரம் ஒரு முறை நோய் குறை கிறதா என இரத்த பரிசோதனை மீண்டும் மீண்டும் செய்து;கொள்ள வேண்டும்
- நோய் குறிகளை குறித்து கொள்ள வேண்டும் .
- பொதுவாக .மருந்து மற்றும் மாத்திரைகளால் பாதிக்க பட்ட சிறுநீரகத்தை இயற்கையாக குணப்பதுத்துவது நிரந்தர மான தாகும் .
- பொதுவாக நோய்கள் வருவது நமது ஒளி உடலில் துவங்குகிறது .இது மனம் பாதிக்க படுவதால் ஏற்படுகிறது .
- எனவே முதலில் ஒளி உடலுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் .
- இரண்டாவதாக .ஸ்துல சரீரத்திற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் .ஏனெனில் மனோ சரிரத்தில் ஏற்படும் பாதிப்பு ஸ்துல சரீரத்திற்கு வந்து விடும் .
- இது பெரும் பாலும் உள் அடக்க பட்ட கோபம் .பழி உணர்ச்சி சூடன விவாதம் போனற காரணகளால் வருகிறது .
- மேலும் பதிக்க்கபட்ட உறுப்புக்கு இரத்த ஓட்டம் செல்வது பாதிக்க படுவதால் செயல் தன்மை குறைகிறது .எனவே மசாஜ் செய்து அப்பகுதியில் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்த வேண்டும் .
- அடுத்தது சுயமாக குணப்படுத்த யோகாசன பயிற்சிகள் அளித்து குணம் அடைதலை துரிடபடுத்த வேண்டும்.
புதன், 17 மே, 2017
கண் ஒளி யோகா பயிற்சி வகுப்பு
கண் ஒளி யோகா பயிற்சி
- 1. கிட்டப்பார்வை
- 2. தூரபார்வை
- 3. மாறுகண்
- 4. கண்ணீர் கசிதல்
- 5. கண் அழுத்தம்
- 6. வெள்ளெழுத்து
- 7. கண் தலைவலி
- 8. கண் மங்கல்
- 9.
கண்ணாடி நீக்க
- 10. வினோத குறிகள்
செவ்வாய், 14 மார்ச், 2017
பணியாளர்ககுக்கு பணியிடத்தில் யோகா பயிற்சி
பணியாளர்ககுக்கு பணியிடத்தில் யோகா பயிற்சி
ஏன் பணியாளர்களுக்குபணியிடத்திலேயே யோகா பயிற்சி தரவேண்டும் ? |
அலுவலக மற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் பணியிடத்திலேயே யோகப்பயிற்சி அளிப்பது இப்போது பிரபலமடைந்து வருகிறது.வர்த்தக நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் யோகாவின் பயனை உணர துவங்கி விட்டனர்... நாங்கள் வேலையின் போது ஏற்படும் மனஅழுத்தம் சமநிலை பெற மற்றும் ஆரோக்கிய திட்டத்தின் ஒருபகுதியாக யோகா பயிற்சி அளிக்கிறோம்.இன்று உற்பத்தியில் முன்னணியில் நிற்கும்
ஆப்பிள் ,கூகிள் மோட்டோரோலா எச் பி ஓ போன்ற
வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கின்றனர்.
பணியிடத்திலேயே யோகா பயிற்சி அளிப்பது அவர்கள் யோக நிலையத்திற்கு வந்து செல்லும்நேரத்தை மிச்சப்படுத்துகிறது. மேலும் பணியிட யோகா மன அழுத்தத்தை மற்றும் வேலையின்போது நாள் முழுதும் சுறுசுறுப்பு ,மேலும் சிறப்பு உறுப்பு பாதுகாப்பு பெற உதவுகிறது. யோகாவின் மிக முக்கியமான பயன் எதுவெனில் விழிப்புணர்வு ஆகும். விழிப்புணர்வு அற்றவர்களே பணியிடத்தில் குடும்பத்தில் விரைவில் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இந்த விழிப்புணர்வு பொறுப்புணர்வை தருவதுடன் வேலையை வாழ்க்கையை நிர்வாகம் செய்ய முடிகிறது. இந்த பயன்கள் கலந்து கொள்ளும் ஒவ்வெருவருக்கும் இயற்கையாகவே யோகா பயிற்சியால் வளம் பெற்று தனது அறிவை உழைப்பை நிறுவனத்திற்கு வழங்குவார்கள்.
முறையான தொடர்ந்த பயிற்சி பணியாளர்களின் உடலில் மனதில் மேம்பட்ட ஆரோக்கியத்தை சக்தியை ஏற்படுகிறது. உற்பத்தி திறனை அதிகரிக்கிறது.
மற்ற உடற்பயிற்சிகளை போலல்லாமல் யோகா தனித்துவமாக உடல் பலம் ,வளையும் தன்மை கவனஒருமுகப்படும் தன்மை ஆகியவற்றை மேம்படுத்துகிறது.உடல் களைப்பு ,மனஅழுத்தம், வேலையில் பதட்டம் ஆகியவற்றை குறைக்கிறது. கூடுதலாக சோர்வை நீக்கி சக்தியை அளிக்கிறது.இவை அனைத்தும் உற்பத்தி திறனை அதிகரிக்க மனஉறுதியை வழிவகுக்கும்.. அலுவலக சூழலுக்கு ஏற்ற படி பல்வேறு திறன் மட்டங்கள் திறன்களை மாற்றியமைக்க எளிய யோகப்பயிற்சியால் முடியும்.
நிறுவனம் பெறும் நன்மைகள்
''யோகா'' கவனம் செலுத்த ,நம்பிக்கையை பெற மற்றும் மனஅழுத்தத்தை குறைக்கும் ஒரு அற்புதமான திறன்வாய்ந்த நேர்மறையான சக்தி இதனால் அதிக உற்பத்தியும் ,இணைக்க்கமான சூழலையும் கொண்டுவர முடியும். பணியாளர்கள் மனதில் மகிழ்ச்சியாக அவரவர் இலக்கினை அடைய கவனத்துடன் பணியாற்றுவர்.உற்பத்தி செய்யும் ஒவ்வொரு பொருளும் மூலத்திட்டத்தோடு ஒத்திருக்கும்.
யோகா பயிற்சியை வழங்குவதனால் நிறுவனத்திற்கு மட்டுமல்ல பணியாளர்களை இயக்குவதில் நிறுவனங்களுக்கும் செலவு குறையும்.
யோகா பயிற்சியினால் பணியாளர் மற்றும் நிறுவனம் இடையே உள்ள உறவு அதிகப்படும். இதனால் நிறுவனத்தின் வருட இலக்கை உணர்ந்து பணியாற்றுவார்.தேவையற்ற விடுப்புகளை எடுக்க மாட்டார். அவர் மனது நிறுவனத்துடன் ஐக்கியப்படும்.
யோகா பயிற்சியினால் பணிசெய்யும் இடத்தில் கூருணர்வு மற்றும் கவன ஒருமுகத்தோடு பணியாற்றுவார். இதனால் பணியிட விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு மிக மிக குறைவு.
பணி மனஅழுத்த பிரச்சனையால் நிறுவனங்களுக்கு வருடத்திற்கு 10முதல் 20 சதவீதம் பணியாளர் தேவையற்ற விடுப்பு எடுத்தல் , குறைக்கப்பட்ட உற்பத்தி ஊழியர் அடிப்படை செலவு,மருத்துவ செலவு , சட்ட செலவு , காப்பீடு ஆகியவையால் செலவு ஆகிறது. இது அதிக பட்சமாக இச் செலவு குறையும்.
மன அழுத்தமே அனைத்து நோயின் பிறப்பிடம். அது நீங்கும் மேலும் மனஅழுத்தம் உடைய ஒருவர் தனது வார்த்தையால் மற்றவர்களயும் பணியிடத்தையும் பதட்டமடைய செய்வார். இது தவிர்க்கப்படும் .
காலப்போக்கில் ஏற்படும் பார்வை தெளிவின்மை ,அதிக நேரம் நிற்கஇயலாமை ,நடக்க இயலாமை ,தொப்பை ,அதிக எடை ,இரத்த அழுத்தம்,சர்க்கரைவியாதி , போன்ற மருத்துவ பிரச்சினைகளினால் இவர்கள் உற்பத்தியற்ற பிரிவில் பணிபுரிந்தாலும் நிறுவனங்களுக்கு கூடுதல் பணவிரயமே.. இதை தவிர்க்க அல்லது நீக்க யோகா பயிற்சி அவசியம் தேவை.
உடல் ஆரோக்கியத்தால் மருத்துவ காப்பீட்டு செலவு குறையும் அல்லது இருக்காது. இதனால் பணியாளர் சேமிப்பு அதிகரிக்கும்..
பணியாளர்களின் உடல்பலம் மூளைபலம் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடை மற்றும் இயங்கும் வேகம் இவையே ஒரு நிறுவனத்தின் முதுகுஎலும்பு பலமாகும்.
ஒரு மரத்தின் வேர் எத்தனை பலமாக உள்ளதோ அதை பொறுத்தே அதன் விளைச்ச்ல் இருக்கும். அதுபோல பணியாளர் ஆரோக்கியத்தை பொறுத்தே உற்பத்தி திறன் இருக்கும்.
ஆரோக்கிய பராமரிப்பு செலவை குறைக்க பணியிடத்திலேயே யோகா பயிற்சி அளிப்பதனால் செலவு குறையும் மேலும் இது புதுமையான அதிநுட்பமான தீர்வு ஆகும்.
பணியிடத்திலேயே பணியாளர் மனதை இலகுவாக்குதல் அவரின் உடல் மனா மேம்பாட்டிற்கு உதவும்.இது நிறுவனத்திற்கு ஒரு சொத்தாகும் நிறுவனத்தின் எதிர்கால வியாபார அல்லது உற்பத்தி விரிவாக்கத்திற்கு பணியாளர் ஆரோக்கியம் அடிப்படை ஆதாரமாகும். ஆரோக்கியத்திலிருந்து பலம் பிறக்கிறது.
ஊழியர்களுக்கு யோகாவினால் கிடைக்கும் நன்மைகள்
- கவனம் ஒருமுகப்படுகிறது.முடிவெடுக்கும் திறன் மற்றும் பல்முக பணிசெய்தல்
- பல்வேறு விஷயங்களால் ஏற்படும் மனஅழுத்த பிரச்சனைகள் வருவதில்லை இதனால் விடுப்பு எடுப்பதில்லை.
- உஷார் நிலை மற்றும் உற்பத்தியும் மேம்படுகிறது, கோரும் சூழ்நிலைகளில் மிக அமைதியாக நடை பெறுகிறது.
- தலை கழுத்து முதுகு மற்றும் பல இடங்களில் உள்ள பிடிப்புகள் தூக்கமின்மை உயர் இரத்த அழுத்தம் மற்றும் வேலை சார்ந்த உடல் உபாதைகள் ஒரே தன்மையான வேலையினால் ஏற்படும் உடல் உபாதை பிரச்சனைகள் பணி சுற்றுப்புற சூழலால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்,இவை அனைத்திலிருந்தும் விடுதலை
- அற்புதமான வாடிக்கையாளர் சேவை அளிக்க உதவுகிறது.
- அணுகுமுறையும் தோற்றமும் மேம்படுகிறது
- பணியிடத்தில் நல்வாழ்வை ஏற்படுத்துகிறது.
உங்கள் ஊழியர்கள் பங்கேற்க யோகா அனுபவம் தேவையா ?
இல்லை இல்லவே இல்லை பணியாளர்களுக்கு எந்த யோகா அனுபவமும் தேவை இல்லை.யோகபயிற்சி பணியாளர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. பணியின்போது ஏற்படும் உடல் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு அளிக்கப்படுகிறது.
எப்பொழுது யோகா வகுப்பு இருக்கும் ? - வேலை நேரத்திற்கு பிறகு மட்டுமே
உங்கள் பணியிடத்தில் உங்கள் பணிநேரம் முடிந்த பிறகு துவங்கும். இந்த வகுப்பு முப்பது நிமிடம் அல்லது நாற்பத்து ஐந்து நிமிடம் அல்லது அறுபது நிமிடம் இருக்கும்.உங்கள் தேவைக்கு தக்கபடி உங்கள் பணியிடத்தில் அமைதியான சூழலில் நடைபெறும்.
கீழ்கண்ட நுட்பங்கள் 'நிறுவன யோகா' பயிற்சியில் அளிக்கப்படும்.
- பணியின்போது ஏற்படும் விபத்து -காயம் தடுப்பு பயிற்சிகள்
- மேஜை மற்றும் நாற்காலி யோகா பயிற்சிகள்
- எளிய உடல் பலமூட்டும் பயிற்சிகள் - மூச்சுப்பயிற்சிகள்
- கவன ஒருமுக படுத்தும் பயிற்சிகள்
- கண் பாதுகாப்பு யோகா பயிற்சிகள்
- கால் மற்றும் தனி உறுப்பு கவன யோகா பயிற்சிகள்
நாங்கள் உங்கள் பணியிடத்தில் யோகா பயிற்சி அளிக்க என்ன தேவை ?
உங்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்க தகுந்த அறை அல்லது போதுமான தேவை அது எத்தனை நபர்கள் என்பதை பொறுத்து அமைத்து கொள்ளலாம். மாணவர்கள் பனியன் பான்ட் மற்றும் டி சர்ட் அணிந்து கொள்ளாலாம் நிறுவன சீருடை இலகுவாக இருப்பின் அதையே பயன்படுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு வருக்கும் தனி யோகா விரிப்பு அவசியம் தேவை .வீட்டில் இருந்து படுக்கை விரிப்பும் எடுத்து வரலாம்.
இதற்கு கட்டணம் என்ன ?
இதில் கலந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை ,வாரத்திற்கு எத்தனை வகுப்புக்கள் என்பதை பொறுத்து கட்டணம் மாறுபடும். குறைந்த பட்சம் பத்து மாணவர்கள் அதிகம் நூறு மாணவர்கள் ஒரு வகுப்பிற்கு இருக்கவேண்டும். உங்கள் இலக்கு மற்றும் கேள்விகளுடன் எங்களை தொடர்பு கொள்ளவும்.